கலைஞர் தொலைக்காட்சியில் முனைவர் மு.இளங்கோவன் அய்யாவின் நேர்காணல்

அன்பின் வலை நண்பர்களே! வணக்கம்.
ஒரு மகிழ்ச்சியான செய்தி.
நாளை -15-03-2012 வியாழக் கிழமை- காலை 8மணியிலிருந்து 8.50வரை நமது கலைஞர் தொலைக்காட்சியில் நமது நண்பர் 
முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் நேர்காணல் வருகிறது.

மின்சார பாத்தியதை உள்ள பெருமக்கள் அனைவரும் கண்டு கேட்டு மகிழ வேண்டுகிறேன்.

அய்யா மு.இ.அவர்கள் -
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஒரு லட்ச ரூபாய் விருது பெற்ற செம்மாந்த தமிழறிஞர் என்பதால் மட்டுமல்ல-

சொந்த உழைப்பில் பாரதிதாசன்-பெரியார்-கருத்துகளைப் பரப்பும் கொள்கையாளர் என்பதால் மட்டுமல்ல -

இன்றைய தமிழின் நுனிமுனைக் கொழுந்தாம் “இணையத்தமிழ்“ வளர்ச்சிக்கு ஏற்பன செய்துவரும் ஏந்தலார் என்பதால் மட்டுமல்ல -

தொடர்ந்து எழுதியும் இயங்கியும் வரும் ஒருசில தமிழாசிரியர்களில் முன்னோடி என்பதால் மட்டுமல்ல -


நல்ல மனிதர் என்பதால் அவசியம் பாருங்கள்.

எனக்கு வலையார்வம் வரத் தூண்டிய “ஞான குரு” என்பதால் இந்த குருதட்சணை!

அவரது வலை வாசல் http://muelangovan.blogspot.in/

அவரது அலைபேசி 9442029053

கலைஞர் தொலைக்காட்சி பார்த்துவிட்டு அவரிடம் பேசுங்களேன்?
அன்புடன்,
நா.மு.

1 கருத்து: