கல்வியில் ஜனநாயகம் தேவை! – நா.முத்து நிலவன்



                  தேர்வு எழுதிய மாணவர்க்கு திருத்தப்பட்ட விடைத்தாளின் நகல் தரப்படும் என முடிவெடுத்த மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை ஆசிரியர்களும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் துணைவேந்தரும் பாராட்டுக்கு உரியவர்கள் கல்வியில்-நாட்டு முன்னேற்றத்தில்-ஜனநாயகத்தில் அக்கறையுள்ள யாரும் பாராட்ட வேண்டிய முடிவு இது.
உயிரைக் கொடுத்துப் படிக்கும் மாணவர்க்கு தமது விடைத்தாள்கள் எவ்வாறு திருத்தப்பட்டுள்ளன என அறிந்து கொள்ள முழு உரிமையும் உண்டு.
மதிப்பெண்ணிலேயே தமது குழந்தைகளின் எதிர்காலம் உள்ளதாக நம்பும் பெற்றோர்க்கு இதன்மூலம் மன உளைச்சல் குறையும் மிகச்சிறந்த அத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகுந்த நிதானம் அவசியம். திருத்தும் ஆசிரியர்க்கும் அரசுக்கும் பொறுப்பு கூடுதலாகும். இந்த  இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சுமத்தாத அளவில் ‘பழிவாங்கப்படுவார்கள்’ எனும் நியாயமான சந்தேகத்தைத் தனது செயல்பாடுகளின் மூலம் அரசு போக்க முன்வர வேண்டும்.
மூன்று மணி நேரத்தில் எழுப்படும் தேர்வுத்தாளை திருத்த குறைந்தது பதினைந்து நிமிஷமாவது தேவைப்படும். திருத்தும் ஆசிரியர் அதே பாடத்தைப் பல ஆண்டுகள் நடத்திய அனுபவசாலியாக இருப்பின் 3 மணி நேரத்தில் 12 தாள் திருத்தினால் மதிப்பீடு முறையாக இருக்கும். ஆனால் கசப்பான உண்மை என்னவெனில் திருத்துவோர் அவ்வளவு நேரம் எடுத்துப் பெரும்பாலும் திருத்துவதில்லை ‘ஆள் போதவில்லை’ என்று 50 தாள்களை ஒரே நாளில் தருவதை அரசும் நிறுத்துவதில்லை!  இதனால் இருவகைப் பாதிப்புகள் உண்டு. அரசு இதில் சிக்கனம் பார்ப்பதோ ஆசிரியர்கள் மெத்தனம் காட்டுவதோ சரியல்ல என்பதை உணர வேண்டும்.
மாணவர்கள் மற்றும் எதிர்காலத் தமிழகத்தின் நலன் கருதி திட்டமிட்டு மதிப்பீடு நடத்தப்படுமானால் தமிழகம்  இந்தியாவுக்கே வழிகாட்டியாக முடியும். மகத்தான வழியில் கல்வித்துறை உயர் அதிகாரிகளும் கல்வி அமைச்சரும். தமிழக முதல்வரும் மனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இதனால் மாணவர்-பெற்றோர் கவலை தீரவும் ஆசிரியர் பெருமை உயரவும் தமிழகமே தலைநிமிரவும் வழி பிறக்கும்.

வெளயிட்டமைக்கு நன்றி : ‘தினமணி’ நாளிதழ் நாள்: 07.06.1997
---------------------------------------------------------------
மதிப்பீட்டு முறை பற்றியே மறுமதிப்பிடு தேவை! – நா.முத்து நிலவன்
கல்விமுறை கெடுத்தது பாதி தேர்வுமுறை கெடுத்தது மீதி! மெக்காலே கல்வி முறையால் சிந்தனையை மழுங்கடித்து ‘கிளிப்பிள்ளை கிளார்க்கு’களையே இதுவரை உருவாக்கி வந்தோம். அதிலும் ‘தப்பித்து’ வந்த சிலரை மதிப்பீட்டு முறையால் மடக்கியிருக்கிறோம்! இரண்டு தலைமுறைகளின் இழப்புக்கு எப்படி ஈடுசெய்யப்போகிறோம்?
துணைவேந்தர் ப.க.பொன்னுசாமி கட்டுரைகளைப் படித்தபிறகு ‘மைய மதிப்பீட்டு முறையா? இல்ல மதிப்பீட்டு முறையா? என்பது பற்றி இனிமேலும் விவாதிக்க வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. மதிப்பீட்டு முறையின் சமூக விளைவுகளைச் சரியாக மதிப்பிட்டு தேவையான மாற்றங்களைச் செய்வதே உடனடித் தேவையாகும்.
அதோடு இந்த மதிப்பீட்டுக் குறைபாடுகள் கல்லூரிக் கல்விக்கு மட்டுமல்ல நூறு சதவிதம் பள்ளிக்கல்வி புண் புரையோடி விட்டது இனியும் புனுகு ப+சுவதில் அர்த்தமில்லை. (10,12-ஆம் வகுப்புக்கும் பொருந்தக் கூடியதே! கடந்த  கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பல ஆயிரம் பேர் மறுகூட்டல் கேட்டார்களே! இங்கு மறுமதிப்பீட்டுக்கும் வழியில் லையாமே! இதை என்ன செய்வது?) மறுமதிப்பீடு மறுகூட்டல் கேட்டு அலையும் மாணவர்களின் எண்ணிக்கை நூறு சதவீதத்தை எட்டுவதற்குள் மதிப்பீட்டு முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதுவும் கூட முதற்கட்டம்தான். இறுதிக்கட்டம் செல்லரித்துப்போன நமது கல்வி முறையையே மாற்றியமைப்பதில் முடிய வேண்டும்.
கல்வி முறையில் கை வைக்காமல் சமூக மாற்றம் சாத்தியமேயில்லை. இந்த வகையில் ப+னைக்கு மணி கட்டும் வேலையைச் செய்திருக்கும் துணைவேந்தரை மனமாரப் பாராட்டுகிறேன்.
கல்வியாளர்களே கைகோத்து வாருங்கள. மூன்றாவது கண்ணைத் திறக்கும் அவசரத்தில் இருக்கும் கண்களையே குருடாக்கும் கல்வி முறை தேர்வு மதிப்பீட்டு முறைகளை மறுமதிப்பீடு செய்வோம்! புதிய தோர் உலகம் செய்வோம்!

வெளியிட்டமைக்கு நன்றி: ‘தினமணி’ நாளிதழ் 22.07.1997
--------------------------------------------------------------------------

2 கருத்துகள்:

  1. அருமையான இடுகை
    பகிர்வுக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  2. mathipeedu aasriyarin mananilaiai poruthe amaikirathu yenbathu marukka mudiyatha onedru kadamaikaha mathipidum nilai mara vendum .thervuku kodukkum mukkiyathuvum mathipiduvatharkkum thanthal maru mathipeedu thevai padathu .kavanathil kolluma arasu.

    பதிலளிநீக்கு